சாதிகள் இல்லையடி பாப்பா
நானும் அவனும் பள்ளிக்கூட நண்பர்கள்
நான் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை என் சாதியை
அவன் என்னிடம் காட்டிக்கொள்ளவில்லை அவன் சாதியை
எதேச்சையாக எப்படியோ தெரிந்தது
நாங்கள் இருவரும் இருவேறு சாதியினர் என்று
பழையபடியே எங்களின் நட்பு தொடர்ந்தது
ஊருக்கு வெளியே சேரியும் ஊரும் ஒன்றாய்...
....செல்வமுத்து மன்னார்ராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
