மீண்டும் வருவாளென

கவிதை ஓன்று கண்ணுக்குள்
பொதிந்து வைத்தேன்
வைத்த கண் வாங்காமல்
பார்த்திருந்தேன்
கவிதையே நிஜமாக அவளாக
ஆனந்தம் அகமகிழ்ச்சி
கொண்டேன் பெருமிதம்
கொண்ட மகிழ்ச்சி சொற்ப நேரம்
மறைந்து விட்டாள் மக்களுள் மக்களாய்
மீண்டும் வருவாளென ஏமாற்றத்துடன்

எழுதியவர் : பாத்திமா மலர் (20-Mar-25, 12:30 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 23

மேலே