Raj NK - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Raj NK |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 18 |
மாடப்புறாவொன்று மங்கையாகி வந்ததே .....
பேடைக்குயிலொன்று பெண்மையாகி வந்ததே....
பச்சைகிளியொன்று பாவையாகி வந்ததே ....
கொண்டைக்குருவியொன்று கோமகளாகி வந்ததே.....
வனப்புகொண்ட வான்மயிலொன்று
என்னெண்ணமெல்லாம் நிறுத்திட ....
திக்கித்திணறும் சிறுபிள்ளையாய்
மொழிமறந்து நான்நின்றிட .....
தேவலோக சிற்பமது
ஊர்வலம் வந்ததடி
ஊரே வியக்கும்படி ....
கொஞ்சிடும் மைனாவொன்று
எனைக்கொஞ்சிடத் தான்வந்ததே .....
கண்சிமிட்டும் நேரமதில்
காதலென்னை தாக்கியதே .....
பனைமர ஓலையொன்று
தானாய்வந்து வீசியதே ....
ஆலமரத் தாழக்கிளையொன்று
தாகங்கொண்டு நிற்குதே .....
எழுந்தோடும் நதியெல்லாம்
எனைக்கேட்டுச் செல்லுதடி
என்னதான் நடக்கும்
புருவஞ்சுருக்கி பார்த்திடுவோம் .....
என்னதான் நடக்கும்
போர்க்களஞ்சென்று பார்த்திடுவோம் .....
அச்சங்கொள்ளத் தேவையில்லை ....
மிச்சம்வைக்காது உண்டுருண்டு
ஓடும் இப்புவிதனில் .....
எக்கச்சக்கமாய் இச்சைகொண்டு
உச்சந்தொட்டு வாழ்ந்தவனும்
யோகமச்சங்கொண்டு ஆண்டவனும்
மிச்சசொச்சமேதுமின்றி
விட்டுவிட்டவோர் எச்சமென
வச்சவொரு உருவில் நின்றார்கள் ......
அச்சங்கொள்ளத் தேவையில்லை ....
சொல்லப்போனால்
நிச்சயமென்றொன்றே இங்கில்லை ....
அந்தரத்தில் மிதக்குமோர்
கோளப்பந்தல்லவோ இது .....
இதில்மந்திரங்கள் வைத்துவோர்
தந்திரங்கள் செய்துவோர்
சந்திரனை தொட்டவோர்
உந்திதனில் எந்த
உன் ஒருதுளி கடலிலே
மூழ்கிட வந்தேன் .....
பொன்நெற்றியிலே ஒருமுறை
முத்தமிட வந்தேன் ....
கணநேர தீண்டலில்
காயங்கள் போக்கி
சாபங்கள் ஏதுமில்லா
சரித்திரம் படைப்போம் .....
இதமான முத்தத்தில்
இளைப்புகள் போக்கி
சாயங்கள் ஏதுமில்லா
சித்திரங்கள் புனைவோம் .....
உருவடிக்கும் உயிர்க்கடலில்
உத்தேசமாய் நீந்திவந்தேன் .....
உள்துடிக்கும் உணர்வுக்கடலில்
பல்கடித்து பதறிநின்றேன் ......
ஏனடி விழியுதிரம் வடிக்கிறாய் .....
சொப்பனத்தில் கண்டவனை
சொடுக்கிடும் நொடியில் கண்டதாலா .....
கற்பனையில் கவர்ந்தவனை
கண்ணெதிரில் கண்டதாலா .....
காதல்மேகமொன்று கருகொண்டுவந்து
கனவிலே நம்முள்ளம் நனைத்தி
கேள் இறைவனே ....
போதும் ...
இந்த மடமானிடம்
நன்குணர்ந்து விட்டது .....
வருடந்தாண்டி போராடிக்கொண்டிருக்கிறோம்
சிறு ஓய்வாவது கொடு
இந்த உலகத்தொற்றிற்கு ......
மறந்துங்கூட நினைத்ததில்லை ...
மரணத்தின் யதார்த்தமதனை ...
அதை யுணர்ந்துவிட்டோம் ....
மருந்திற்கே நீண்ட வரிசை ....
கேள்விப்பட்டதில்லை எந்தலைமுறையில் ....
அதையும் பார்த்துவிட்டோம் ......
மருத்துவமனை வாசலில்
காத்திருப்பில் நோயாளிகளாம் .....
அடுக்கடுக்காய்
அவசர ஊர்திகளாம் ....
அதில்சிலர் அங்கேயே மரணமாம் ....
காணும்போதே நெஞ்சமது
பதைபதைக்கிறது .....
திரைக்காட்சிகளில் அல்லவா
அப்படிச்சில பார்த்திருக்கிறோம் ....
சு
ஒட்டி உறவாடிய
உறவுகள் .....
கூடிக்குதூகலித்த
நட்புகள் ......
மணப்பந்தல் ஏறிய
உள்ளத்தில் வாழ்ந்த
ஒருதலைக்காதலி .....
உவமையாய்மாறி
உதறியெனை தள்ளிச்செல்ல ......
காற்றிடம் கதைபேசி
களைத்திவன் அமர்ந்திருக்க .....
வெற்றுக்கிளை தாங்கிய
இலையுதிர்கால
மரமது ஆறுதல் சொல்லியது
மெளனமாய் ......