ஆமகராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆமகராஜன் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 18 |
யாரும் நம்பி விடாதீர்கள்..
சிலுவையில் அறைந்து விடும்
நோக்கில்தான் என்னை
தேவதூதன் என்று புகழ்கிறார்கள்
என் எதிரிகள்..
யாரும் நம்பி விடாதீர்கள்..
சிலுவையில் அறைந்து விடும்
நோக்கில்தான் என்னை
தேவதூதன் என்று புகழ்கிறார்கள்
என் எதிரிகள்..
யாரும் நம்பி விடாதீர்கள்..
சிலுவையில் அறைந்து விடும்
நோக்கில்தான் என்னை
தேவதூதன் என்று புகழ்கிறார்கள்
என் எதிரிகள்..
ஒரு பசுவின் சாபம்
==================
தான் பெற்ற பிள்ளைக்குத்தான்
பாலூட்டுவாள் தாய்
யார் பெற்ற பிள்ளைக்கும்
பாலூட்டினேன் நான்.
பயனற்றுப் போன
தாயை முதியோர் இல்லத்துக்கும்
பால்வற்றிப் போன என்னை
பசு வதைக்கூடத்திற்கும்
அனுப்பிய நீயும் ஒரு நாள்
உடல் வற்றி யாருக்கும்
உபயோகமுமற்றுப் போகும் போது,
கவலை வேண்டாம்..
உன் மகன் அனுப்பி வைக்க
ஒரு மனித வதைக்கூடத்திற்கு
எதிர்காலம் ஏற்பாடுகள்
செய்திருக்கும்..
- ஆ.மகராஜன்,திருச்சி.
எத்தனை முறை வாசித்தாலும்
தித்திக்கிறது அவள் பெயர்.
ஒற்றை வார்த்தை ஹைக்கூ.
- ஆ.மகராஜன், திருச்சி
நீர்க்குமிழி
**************
வளிமண்டலத்தின் ஒரு
சிறுபகுதியைத் தன்னுள்
சிறை பிடித்து விட்ட,
அகம்பாவத் திமிருடன்
நீர்வெளியின் மேற்பரப்பில்
ஆணவமாய் அலைந்து
கொண்டிருக்கிறது..
'எப்பொழுது வேண்டுமானாலும்
உடைந்து போகலாம்'
என்கிற உண்மை உணராமலே..!
- ஆ.மகராஜன், திருச்சி.
இந்த உலகம் எல்லா உயிரினங்களுக்கும் சமமானது ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த உண்மையை மறந்து மனிதர்களுக்குக்குமட்டும் தான் இந்த உலகம் சொந்தம் என்பதை போல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.காட்டுக்குள் சென்று இயந்திரங்கள் உதவியால் வேட்டையாடி வீரம் என்றோம் , காடுகளை அழித்து வீடுகளைக்கட்டி ஊர் என்றோம் மிருகங்கள் ஊருக்குள் வந்து தொந்தரவு செய்ததால் கொன்றுவிட்டோம் என்று பழியையும் பாவம் மிருகங்கள் மீதே போட்டோம் இவற்றையெல்லாம் எதிர்த்து வேறு எந்த நோக்கமும் இல்லாமல் உண்மையாக போராடும் விலங்குகள் நல அமைப்புகளுக்கும் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும் நன்றிகள் கோடி.
ஆனால் விலங்குகள் நல அமைப்புகள்
பாட்டியின் சுருக்குப் பையும்,
பழைய செல்லாக் காசுகளும்...!
. ********************
- ஆ.மகராஜன்
பொங்கலுக்காகப் பரணில் கிடந்த
பழைய பொருட்களை
ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோது
துருப்பிடித்த ஒரு
பழைய டிரங்க் பெட்டிக்குள் அந்த
சுருக்குப்பை கிடைத்தது...
அப்பொழுது யாரும் அக்கறையோடு
கண்டு கொள்ளாத,
பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயே
வெள்ளைப் புடவைக்குள் சொருகிப்
பாதுகாத்து வைத்திருந்த பை அது...
இறுகிப்போயிருந்த சுருக்குக் கயிற்றைப்
பிரயத்தனப்பட்டு இழுத்துத் திறந்ததும்,
உள்ளே பல்லாண்டுகளாய்
அடைபட்டுக் கிடந்த எராளமான
மலர்களைப் புரியாத மனிதர்கள்..!
***************
- ஆ.மகராஜன்
புரிந்து கொள்ளப்போவதில்லை என்று
தெரிந்திருந்தும்,
இந்த மலர்கள் மட்டும் தொடர்ந்து
மனிதர்களுக்குப்
பாடம் நடத்திக்கொண்டே இருக்கின்றன..!
வாசமும் வாழ்க்கையும்,
சுற்றிலுமுள்ள முட்களுடன்தான்
என்ற போதும்,
எப்பொழுதும் அழகாய்
சிரித்துக் கொண்டே இருக்கின்றன
ரோஜாப் பூக்கள்..!
தனது வேர்கள் புதைந்து நிற்பது,
அழுக்கான சேற்றில்தான் என்ற போதும்,
அருவருப்பை முகத்தில்
பிரதிபலிக்காது
மலர்ச்சியாய் இதழ்கள் விரித்து
நிற்கின்றன தாமரை மலர்கள்..!
ஆயுள் என்னவோ அற்பம்தான்
என்றாலும்,
வருத்தம் ஏத
பைசா நகரத்துக் கோபுரத்தையெல்லாம்
அதிசயமாய்க் கூறி வியக்கும்
அறிஞர்களே!
என் காதலியின்
தங்கநிற அங்கத்தைத்
தாங்கி நிற்கின்ற,
நூலிடையை விடவா அது
நூதனமானது..!?
- ஆ.மகராஜன்