kirungai sethupathi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kirungai sethupathi |
இடம் | : kirungakkottai |
பிறந்த தேதி | : 16-Jun-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 396 |
புள்ளி | : 19 |
எழுத்தாளர்; கவிஞர்; ஆய்வாளர்.
பாரதி மர்பில் கவிதையை முன்னிறுத்தி, ‘தமிழில் மகாகவிதை தோன்ற வேண்டும் என்ற ஆவலோடு வெளிவரும் இலக்கிய இதழ், மஹாகவிதை.
சிறந்த கவிதைகளோடு, ஒவ்வோர் இதழிலும் ஒரு புதுக்கவிஞர் அறிமுகம். பாரதியாரின் அறியப்படாத தகவல்கள். நூலறிமுகம் உள்ளிட்ட பல சிறப்புகளோடு...
மழை இல்லை.
உழவில்லை
வேளாண்நிலம் இல்லை.
புத்தாண்டை-
சின்னத்திரைகளில் மாற்றி மாற்றிக்
கொண்டாட்டமாகப்
பார்த்துக் களிக்கும்
எத்தனை பேருக்கு
நினைவில் வரும்,
கட்டியெழுப்பிய நம் வீடுகள்
வயல்களை விழுங்கி
எழுந்தனவென்று?
சூடேறிய வெப்பக் காற்றைக்
கிழித்தபடி
நாற்கரச்சாலையில்
விரையும் நம் வாகனங்கள்,
வண்டி மாடுகளின்
குருதி குடித்து வளர்ந்தவை
என்றும்
உலகையே விழுங்கி
ஏப்பம் விடத்துடிக்கும்
ஒவ்வொருவரும்
பாட்டனுக்குப் பாட்டனும்
பாட்டிக்குப் பாட்டியும்
ஊட்டி வளர்த்த
ஒரு தானிய மணியின்
மீச்சிறு அணுவில் இருந்து
உதிர்ந்தவர்கள்
என்றும்
உணராமல் சொல்லும்
வார்த்தையில்
புத்தாண்டு
எ
எத்தனை நாளைக்குப்
பொட்டலம் கட்டி
நெருப்பைச் சுமப்பது?
எரிந்துகொண்டிருக்கிறேன்.
அணைக்க
வா
எத்தனை நாளைக்குப்
பொட்டலம் கட்டி
நெருப்பைச் சுமப்பது?
எரிந்துகொண்டிருக்கிறேன்.
அணைக்க
வா
அன்பார்ந்த எழுத்து நண்பர்களே, பாரதி மரபில் தமிழ் இலக்கியத்தளத்தை மேலெடுத்துச் செல்ல புதுவையில் இருந்து வெளிவருகிறது, மஹாகவிதை இலக்கிய இதழ். ஒவ்வொர் இதழிலும் கவிமுகம் அறிமுகம் - சிறப்புப் பகுதி. இதுவரை எந்த இதழிலும் வெளிவராது வைத்திருக்கும் கவிதைகளை அனுப்பலாம். 35 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகளுக்கு சிறப்பு இடம் உண்டு. படைப்புகள் அனுப்ப முகவரி- மஹாகவிதை, 321, 3ஆம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி- 605008 பேச : 9443190440
அன்பார்ந்த எழுத்து நண்பர்களே, பாரதி மரபில் தமிழ் இலக்கியத்தளத்தை மேலெடுத்துச் செல்ல புதுவையில் இருந்து வெளிவருகிறது, மஹாகவிதை இலக்கிய இதழ். ஒவ்வொர் இதழிலும் கவிமுகம் அறிமுகம் - சிறப்புப் பகுதி. இதுவரை எந்த இதழிலும் வெளிவராது வைத்திருக்கும் கவிதைகளை அனுப்பலாம். 35 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகளுக்கு சிறப்பு இடம் உண்டு. படைப்புகள் அனுப்ப முகவரி- மஹாகவிதை, 321, 3ஆம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி- 605008 பேச : 9443190440
'எனது கவிதைக்கு
இரண்டாம் பரிசாம்'
முன்பென்றால் கோபத்தோடு
மறுத்திருப்பேன்
இப்போது
உண்மையாகிவிட்டதே!
'என்
முதலே
வா
போய்
வாங்கிவருவோம்!
"முத்தம் கொடுத்துப்
பசியாற முடியாது"
நீ சொல்வது சரிதான்!
"முத்தம் இன்றி
உயிர் வாழ முடியாது"
என்று நான்
சொல்வதையும்
ஏற்றுத்தான்
ஆகவேண்டும்!
நம் பாரதியார் பாடுகிறார்:
"மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று!"
"முத்தம் கொடுத்துப்
பசியாற முடியாது"
நீ சொல்வது சரிதான்!
"முத்தம் இன்றி
உயிர் வாழ முடியாது"
என்று நான்
சொல்வதையும்
ஏற்றுத்தான்
ஆகவேண்டும்!
நம் பாரதியார் பாடுகிறார்:
"மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று!"