உனக்கான கவிதை -13
"முத்தம் கொடுத்துப்
பசியாற முடியாது"
நீ சொல்வது சரிதான்!
"முத்தம் இன்றி
உயிர் வாழ முடியாது"
என்று நான்
சொல்வதையும்
ஏற்றுத்தான்
ஆகவேண்டும்!
நம் பாரதியார் பாடுகிறார்:
"மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று!"

