thamizthenee - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thamizthenee |
இடம் | : Chennai - India |
பிறந்த தேதி | : 01-Jul-1947 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 6 |
என் புனைப்பெயர் தமிழ்த்தேனீ,இயற்பெயர் கிருஷ்ணமாச்சாரி. நான் ஒரு நடிகன் , எழுத்தாளன்
" கற்பனை சுகங்கள் “ கதை
நடுவிலே ஒரு கயிற்றுக் கட்டில் அதன் மேல் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு பார்வையை சுழலவிட்டார் தியாகேசன்.
பிரும்மாண்டமான தோட்டம் பண்ணை ஒரு பக்கம் பச்சைப்பசேல் என்று பசுமையாகக் தொடர் வண்டி போல காட்சி அளிக்கும் வரிசையான வளமான தென்னை மரங்கள்
சற்றே பார்வையைத் திருப்பினால் கொத்துக் கொத்தாய் காய்த்து பழுத்து தொங்கும் மாங்கனிகள் உள்ள மாந்தோப்பு அப்படியே பலாமரம் கொய்யா மரம் மாதுளை , முந்திரிமரங்கள் அங்கே இருந்து கூவும் கிளிகளின் குயில்களின் இனிமையான கானம்
தென்றலாய் வருடும் காற்று எக்காலத்திலும் வற்றாத வண்ணம் கோமதி அம்மனின் அருளோடு அமைந்த பிரும்மாண்டக் கிணறு அதிலிருந்து
" சாதனை வேர்கள் "
வேகாத வெய்யில்னு சொல்றாங்க சென்னையிலே மனுஷனே வேகற வெய்யில், அப்படிப்பட்ட வெய்யிலில் போய் காய்கறிகள் , பழங்கள் , கருவேப்பிலை பச்சை மிளகாய் எலுமிச்சம் பழம், தொக்கு போட மாங்காய், தினசரி ஊறுகாய் போட மாங்காய், ஆவக்காய் மாங்காய் போட ஒரு வகை மாங்காய், அதைத்தவிர மாவடு, இஞ்சி எல்லாத்தையும் பாத்துப் பாத்து வாங்கி வியர்த்து வழிந்து அதைத் துடைக்கக் கூட முடியாமல் எல்லவற்றையும் உள்ளே கொண்டு வந்து வைத்தார் சபேசன்
அவர் மனைவி இந்தாங்க தண்ணீர் குடிங்க அப்பிடியே இந்த வியர்வையை துடைச்சிக்கோங்க ஜலதோஷம் பிடிக்கும் என்றபடி தண்ணீரை நீட்டினாள் .அதை வாங்கிக் குடித்துவிட்டு. அப்
“ கல்வி என்பது”
மாணவர்களுக்கு முதலில் அவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்தி அவர்கள் மனதில் ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே நம் முன்னோர்கள் கல்வி கற்க ஒரு மாணவன் எப்படி குருவை மதித்து ஒழுக்கமாக அடங்கி நடந்து கல்வியைக் கற்கவேண்டும் என்று முறையாக ஏற்படுத்தி வைத்திருந்ததை தெளிவாக எடுத்துச் சொல்லி ஒரு கட்டுப்பாடான கல்வி முறையை, ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்.
மாணவப் பருவம் என்பது குதூகலமான கள்ளமில்லாத குழந்தையைப் போன்றது அதிலே கவலைகளுக்கோ மன சஞலத்துக்கோ இடமில்லை நல்ல உணவு நல்ல விளையாட்டு நல்ல உடற்பயிற்சி நல்ல கலைகளை வளர்த்துக் கொள்ளும் திறமை . என்று நல்லவைகளையே போதித்து அவைகள
நாட்டுக்காக, மொழிக்காக தொண்டாற்றிய தலைவர்கள் மற்றும் சான்றோர்களைக் கெளரவிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை, தன்னலமற்ற தொண்டுகளை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் விதத்திலும் அவர்களுக்கு நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், மணிமண்டபங்களை தமிழக அரசு உருவாக்கி பராமரித்து, அரசு விழாக்களை நடத்தி பெருமை சேர்த்து வருவது நாம் அறிந்ததுதான்.
கடந்த 19 ஆம் தேதி பிப்ரவரி 2017ல், தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுகிற உ.வே.சா அவர்களின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கெளரவித்தது தற்போதைய அரசு.
தங்கத் தமிழன் வாழ்ந்த இடம், வங்கக் கவி வந்துபோன இடத்தை இடித்துத் தரைமட்டமாக்கப் படும்போது தமிழார்வலர்களெல்லாம