பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை - பிறனில் விழையாமை
குறள் - 141
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
அறம்பொருள் கண்டார்கண் இல்.
Translation :
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.
Explanation :
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
எழுத்து வாக்கியம் :
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
நடை வாக்கியம் :
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.