எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதார்த்தமாய் இத்தளத்தினில் நுழைந்தவன்...

.எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எதார்த்தமாய் இத்தளத்தினில் நுழைந்தவன் நான்... நான் வரும்பொழுது மாபெரும் கவிஞர்கள் கூட்டம் குழுமியிருந்த இடம் இது... எங்கு சென்றீர்கள் என் அன்பான தோழர்களே!??? இடையினில் கொஞ்ச காலம் பணவசதி இல்லாததாலும் கணினி களவு போனதாலும் தளத்தினை தொடர முடியவில்லை... எங்கு என் காகித கவிதைகளை எறிவது என தெரியாமல் இத்தளத்தினில் கொட்டும்பொழுது அதற்கு அங்கீகாரம் தந்தவர்கள் நீங்கள்... ஒவ்வொரு முறை இப்பொழுது இந்த தள அறையினில் நுழையும் பொழுதும் பழைய பள்ளி நினைவுக்கு வருகிறது... காதோரம் பழைய கருத்துக்கள் சத்தம்.. பழைய விவாத குரல்.. பழைய நகைச்சுவை சிரிப்புச் சத்தம்.. இவை அனைத்தும் இப்போது கிடைக்காமல் கன்னம் ஈரமாக சட்டென்று அனைக்கிறேன் என் கணினியை.. எங்கே என் தோழர்கள்.. எங்கே என் கவிப்பறவைகள்... வந்து விடுங்கள் இன்றே...

நாள் : 12-Aug-15, 4:34 pm

மேலே