தென்றலோடு தேன் கலந்து ..அதில் ஒரு முத்தமிட்டு.. அனுப்பிடல்...
தென்றலோடு தேன் கலந்து ..அதில் ஒரு முத்தமிட்டு..
அனுப்பிடல் வேண்டும் ..ஆனால்..என் வேண்டுதல் என்னவோ
அது உன் "இதழ்களை" மட்டும்தான் தீண்ட வேண்டும்...
மொட்டு மல்லிகை குவியலில் ஒரு முத்தமிட்டு அனுப்பிடல் வேண்டும்
என் வேண்டுதல் என்னவோ அது உன் "கூந்தலில் "ஒய்யாரமாய் அமர்ந்து கொள்ளல் வேண்டும்..
இன்னும் நிறையவே வேண்டும்தான் ..
இறுதிவரை என் இதயம் அது
உன்னில் மட்டும்தான் வாழவேண்டும்