வாழ்க்கையின் வழி

படிப்பில் உயர்வான் என்பர், படித்தபின்! படிப்பால் வரும் பணத்தால் உயர்வான் என்பர், பணமுமானவனாய் அவன் ஆன பின்! பாதியாய் ஒருத்தி வந்தால் இவன் உயர்வான் என்பர், பாதியின் பார்வையில் பதியானபின்! பாதியும் பாதியும் இணைந்து உருவாக்கிய ஜோதி வந்தால் இவன் உயர்வான் என்பர், ஜோதியாகிய வாரிசு வந்தவுடன், இவனே "என்பராகி" இவன் வாரிசை "படிப்பால் உயர்வான்" என்று தொடங்கி தொடர்வான்... life cycle 🤔 "யாக்கையில் யானே யாரென்று தெரியா பதரை, ஐயோ இவன் மனிதனென்பர்" 😂😂

பார்த்த திரைப்படத்தை மற்றொரு முறை பார்க்க பிடிக்காத இந்த மனிதன், வாழ்ந்த வாழ்க்கையை மறுமுறை வாழ நினைக்கும் மனிதன்?????? ஏன்???



கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 25-Jul-17, 12:01 am
0


மேலே