சிவகாமியின் சபதம்

(Tamil Nool / Book Vimarsanam)

சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் விமர்சனம். Tamil Books Review
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவரே ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது.

சேர்த்தவர் : எழுத்து
நாள் : 27-Mar-14, 6:45 pm

சிவகாமியின் சபதம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே