ஆலிலைக் கண்ணன்

பாடினான் பரவசமாக
ஆடினான் ஆனந்தமாக
தன்னை மறந்து
தன நிலை மறந்து
ஆடிப் பாடினான்

கண்ணீர் மல்க
உதடுகள் துடிக்க
இமைகள் படபடக்க
மெய் மறந்து
ஆடிப் பாடினான்


ஆடும் போது
கண்ணா என்று கூவினான்
கேசவா என்று அழைத்தான்
அவன் கண் முன்னே
தோன்றினான் ஆலிலைக் கண்ணன்
குழந்தை வடிவிலே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Oct-13, 5:41 pm)
பார்வை : 112

மேலே