வேதம் எந்த மதம்
முதலில் காற்று
---வேதம் ஓதியது
வேதம் பின்னர்
---வாழக்கையை ஓதியது
யுகங்கள் கடந்தன
---சிறகுகள் வீசி...
தேவ, அசுர
---வாய்மை, பொய்மை
தர்மம், அதர்மம்
---யுத்தங்கள் யாவும்
சரியாய் நிகழ்ந்தன ..
ஒவ்வொரு யுத்தமும்
--வாழ்க்கையைப் புகட்டின
வேதங்கள் எங்கும்
---வியாபித்திருந்தன
வாழ்க்கையாய் .. ஆமாம்
---வாழ்க்கையாய் மட்டுமே.
ஆயிரம் வசந்தங்கள்
---கடந்தொரு காலம்..
உலகில் முதலாய்த்
---தோன்றிச் செழித்த
'நாலாந்தா ' பல்கலைக்
---கழகம் வந்து
வருடங்கள் தங்கி
---வேதம் படித்தான்
பதின்மூன்று வயது
---ஞானச் சிறுவன்
அவனே
---இயேசு நாதன்;
பூமியின் பாவங்களைக்
---குருதியால் கழுவினன்
"நபி"யின் தந்தையும்
---தாய்வழி மாமனும்
வேதங்கள் பயின்ற
---ஞான குருக்கள்;
மெக்காவின் கோயிலில்
---அருட்பெரும் சோதியாம்
பரம்பொருள் 'ஐயனு'க்கு
---பாசுரம் பாடினர்
வேதம் என்னும்
--ஆழக்கடலில்
மூச்சடக்கியே
---முத்தெடுத்தவன்
புத்தன்...! ....அவன் ,
வேதக் கனிகளைப்
--பறித்து , அவற்றுள்
வீணென சிலதை
--ஏற்க மறுத்தவன்
வாழ்க்கையை மலராய்
--நேசிக்கச் சொன்னவன்
யுகப் புருஷர்கள்
--ஞானிகள் யாவரும்
வேத நதியில்
--மூழ்கிய பின்னரே
வாழ்க்கையைக் கவிதையாய்
--வாசித்துக் காட்டினர்.
வேதம் என்பதே
--வாழ்க்கையைச் சொல்வதே - அதை
மதமெனத் திரித்தது
--சரித்திரச் சாபம்
மதங்கள் என்பவை;
---கத்தியால், வஞ்சத்தால்
கறுத்த மனங்களின்
---புத்தியால் வளர்ந்தவை
இங்கு,
மதங்கள் என்று
--இல்லவே இல்லை-அவை
மனதைக் கவ்விய
--பேயின் நிழல்களே..!
வாழ்க்கை மலரைக்
---கிள்ளி யெறிந்து
வசந்தம் குலைத்த
--வரலாற்றுப் பிழைகளே..!
மானுடம் நமது
--மதமெனக் கொள்வோம்
மலர்களின் கானமே -நம்
--வேதங்கள் என்போம்.
*