எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுஜாதா வெண்பாக்கள்

லஸ் கார்னர் பிளாட்ஃபாரக் கடைல பழைய கணையாழி இஷ்யூ ஒண்ணு பார்த்தேன்.  சுஜாதா அதுல ஒரு வெண்பா எழுதி இருக்கார்.
விண் நெடுகப் பரவி, பாரிஸ் வனிதையர் போல்  கண்ணடிக்கும் தாரகை யெல்லாம் எண்ணி வைத்த  முட்டாள் ஒருவர் இருக்கார்; அவர் நமக்கு  எட்டாத கடவுளப்பா!
சங்க கால, தங்க காலத்துக்காரங்கதான் வெண்பா, என்பா, உன்பாவெல்லாம் எழுதணுமா என்ன ? இப்படி லேசான ஹ்யூமரை சுருக்கமாக வெளிப்படுத்த வெண்பா ஸ்டைல் ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு பட்டுது.  சின்னதா நானும் ஒண்ணு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.  (இலக்கணமெல்லாம் பார்க்காதீங்க

மசாலா தோசையென்றும் மாம்பழத்து ஜூஸ் என்றும் குஷாலாயிருக்குமென்று குல்ஃபியும் — மஜாவா  ஸாட்டர்டே சாயங்காலம் சக்கைப்போடு போட்டதனால்  ‘வாட்டரா’கப் போச்சே பணம்!

மேலும்


மேலே