தமிழ் கவிஞர்கள்
>>
மீரா (கவிஞர்)
>>
ஆ!
ஆ!
பசும்புல்லை மேய்வதனால் என்னை நீங்கள்
பசுஎன்பீர்; என்பேரோ கார ணப்பேர்!
முசுகுந்தன் முன்னோனாம் மனுவின் மைந்தன்
முறைதவறித் தேரோட்டி என்னி னத்தின்
சிசுமாய்த்தான்; ஆராய்ச்சி மணிய டித்தேன்;
செவியுற்ற சோழன்ஓ டோடி வந்தான்;
பசுவாஆ ராய்ச்சிமணி யடித்த தென்று
பார்த்தே ‘ஆ’! என வியந்தான், “ஆ” ஆனேன்நான்!
பெண்பால் நான்! என்பாலை உண்டே நீங்கள்
பெரும்பாலும் உரங்காண்பீர்! நீங்கள் தாய்ப்பால்
உண்பதெலாம் ஒருபருவம்; ஆனால் என்பால்
உயிர்போகும் வரைபருகி வருவீர்! இந்தப்
பண்புணர்ந்தே குறளுக்கு ‘முப்பால்’ என்று
பழந்தமிழர் பெயரிட்டார். ஆனால் இன்று
பண்பாட்டில் மிகமட்டம் நீங்கள்; கன்று
பால், கூடக் குடிப்பதற்கு விடுகின் றீரா?
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
