முருகக் கடவுள்மீது கிளித் தூது

சொல்ல வல்லா யோ? -- கிளியே
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி

வல்ல வேல் முருகன் -- தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலா வென்று (சொல்ல)

சரணங்கள்

தில்லை யம்பலத்தே -- நடனம்
செய்யும் அமரர்பிரான் -- அவன்
செல்வத் திருமகனை -- இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல) 1

அல்லிக் குளத்தருகே -- ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே -- அங்கொர்
முல்லைச் செடியதன்பாற் -- செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல) 2

பாலை வனத்திடையே -- தனைக்கைப்
பற்றி நடக்கையிலே -- தன்னகை
வேலின் மிசையாணை -- வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று (சொல்ல) 3

‘குருவெற்பு’ என்பது திருநெல்வேலிக்கு அண்மையிலுள்ள
சுப்பிரமணிய க்ஷேத்திரமாகிய ‘குரு மலை’ என்னும்
ஊராகும்.

‘நின் சேவகம்’ என்பதற்குப் பதிலாகத் ‘திருப்புகழ்’ என்றும்
ஒரு பாடம் உண்டு.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(26-Oct-12, 10:21 am)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே