தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
தோத்திரப் பாடல்கள் கண்ணன் வரவு
தோத்திரப் பாடல்கள் கண்ணன் வரவு
வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
வருவாய், வருவாய், வருவாய்.
சரணங்ள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின் னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்) 1
இணைவாய் எனதா வியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்) 2
எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்)
3
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
