தமிழ் கவிஞர்கள்
    >> 
    நாஞ்சில் நாடன் 
    >> 
    விரகம்
விரகம்
மழைக்கு இருட்டி வரும் மதியம்
நகரப் பேருந்து நெரிசலில்
உடல் புழுங்கி வியர்க்கிறது
வானொலியில் கனிந்தொழுகும்
விரக ரசம்
நாநீட்டிப் பருகும் இருசனம்
கனவின் மாங்கனி
பசியாற்றாது
விரகம் என்பதோர்
வியாபாரம்.