உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
ஒன்றிருப்பது அழகுதான்.
மற்றவை யெல்லாம்
உள்ளும் புறமும்
தனியே தெரிய இருக்கும் பொழுது.

எந்தப் பொருளின்
முடிப்பாகமோ
அடிப்பாகமோ
உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
இருக்கும் இப்பொருள்?

ஒன்றையும் காணாமல்
உள்ளும் புறமும்
தெரிய பொருளின் ஊடு
உலகைப் பார்த்தேன்
உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய்
நகர்கிறது பக்கவாட்டில்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:35 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே