தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
பிரிவும் சேர்க்கையும்
பிரிவும் சேர்க்கையும்
என்னை நோக்கிக் கையொன்று நீண்டது.
குச்சிக் குப்பை ரேகை படர்ந்த
உள்ளங் கையைத் தொடர்ந்து பார்த்தேன்.
இல்லை யென்றும் அதற்குள் சொன்னேன்.
இல்லை யென்றதும் மடங்காத தனது
கையை எடுத்துக் கொண்டு அவள் நகர்ந்தாள்.
இருப்பிடத்துக்குத் திரும்பும் பொழுது
சட்டைத் துணியில் மசித் துளிக் கறை போல்
அவளது கண்கள் நினைவில் எழுந்தன.
பிச்சையே எடுப்பாள் என்று நினைத்தேன்.
இரண்டாம் வகுப்பின் கழிவறைப் பக்கம்
சீட்டில்லாமல் பயணம் செய்வாள்
அப்படி ஒருநாள் பார்க்கும் பொழுது
கொடுப்பதாய் எண்ணினேன். ஆனால்
ரோகியாய் அவளைத் தவறாய்க் கருதி.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
