சும்மா

இறுகத் திருகியதும்
கழுத்தில் துளிர்த்ததை மனத்தில் கண்டு
எழுது கோலைத் தேடி எடுத்தேன்

போதுமா இன்னும் ஊற்ற வேண்டுமா?
மூடுதல் எளிமை திறப்பது கடினம்
மூடலே கடினமாய் இருக்குமானால்?

எளியதாய்த் திறந்து கொண்ட
எழுது கோலின் தொண்டைக் குள்ளே
ஒலிக்காத சொற்கள் போலக்
குமிழிகள்.
ஊதிப் பார்த்தேன்.
ஊசியால் குத்திப் பார்த்தேன்
குமிழியில் ஒன்று கூட
அதற்கெல்லாம் உடையவில்லை
ஊற்றினேன் மையை மை மேல்
வந்தது குமிழிக் கூட்டம்
வெளியிலே விழுந்தடித்து
திருகினேன் இறுக்கி. அங்கே
கழுத்தில் பனித்தது மனத்தில் கண்டது.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:37 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே