மயில் பற்றி

உன்விழி நீலம்; உன்தோகை நீளம்;
உன்னுடல் மரகதம்; உச்சிக் கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்!
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!

ஈர முகிலினை ஏன் விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்று நீர் சுடுமென்றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?


கவிஞர் : சுரதா(18-Jul-11, 11:25 am)
பார்வை : 1708


மேலே