வண்டிக்காரன் பாட்டு

"காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?" "எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!

"நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே"-"எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!"


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(2-Nov-11, 12:09 pm)
பார்வை : 135


மேலே