கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:44 pm)
பார்வை : 154


மேலே