மலரின் பங்கம்
கடவுளுக்கு
மலர்களை உதிர்த்து
அர்ச்சனை செய்பவனிடமும்
திருமணத்தில் மலர்களை உதிர்த்து
ஆசி புரிபவனிடமும்
மரண ஊர்வலத்தில்
மலர்களை உதிர்த்து
சாலையை நிரப்புபவனிடமும்
மன்றாடிக் கேட்டுக்கொண்டன
மலர்கள்....
"எங்களை உரித்து
சிதைத்து பங்கம் செய்யாமல்
இயற்கையாய் மரணிக்கவிடுங்கள்
மானுடமே" என்று!
-----வெண்ணிலா------

