உழவின்றி உலகில்லை(பொங்கல் கவிதைபோட்டி)

காய்கறி.....கனிகள்....
கிழங்குகள்....கீரைகளெல்லாம்
தானாகவே விளைந்திடுமோ....?
கழனிஎங்கும் சூரியகாந்தி
காட்டாமணக்கு பயிரிடாமல்
சமையலெண்ணெய்....விளக்கெண்ணெய்
எங்கிருந்து வருமாம்....?
விதவிதமாய் ஆடையணிந்து
வீதிகளில் செல்பவரே.....!தோட்டத்தில்
விதைத்த பருத்தி வெடிக்காவிடில்
இலை தழை கொண்டுதானே
மறைக்க வேண்டும் மேனியை.....!
பாமரனுக்கு மட்டுமல்ல
பட்டம் படித்தவனுக்கும் பசியிருக்கும்....!
ஒருவேளை உண்ணாமல் இருந்துப்பார்
பசியில் உயிரே துடிக்கும்....!
உழவனின் வியர்வையில் விளைந்த
நெற்கதிர்கள்.....கோதுமைபயிர்கள்....
உலகின் பசிபோக்கும் சூரியக்கதிர்கள்...!
அறிவியல் பொறியியலென
அத்துணை துறைகளிலும்
வளர்ந்து வல்லரசே ஆனாலும்
உழவில்லா நாடு....வெறும்
உயிரில்லா கூடு தான்....!