" பொங்கல் கவிதை " தை மகளே வருக...

தை மகளே வருக...
தை மகளே வருக...
உன் வரவை
எண்ணி மகிழும் நிலையில்
நான் இல்லை...
அன்னை தாங்கும்
இந்த பூமியிலே
பெண்ணை வணங்கும்
மனிதர்கள் மடிந்தது போலே...
எங்கும் காமுகர்களின்
வெறியாட்டம் அரங்கேறி கொண்டிருக்கிறது...
வேதனையில்,
வெந்து போகும் நெஞ்சம்
எங்கே உன்னை வரவேற்கும்...
இருப்பினும்,
வரவேற்கிறேன்...
தை மகளே வருக...
தை மகளே வருக...
உன் வரவிலாவது
பெண்மையின் இருள் நீங்கட்டும்...
ஒளி வெள்ளமாய்..
மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும்...
எல்லாம் போக,
வருடமெல்லாம்
உழைத்து சோர்ந்து போன உள்ளமும்
உன் வரவால் உள்ளம் பொங்குமே...!!!
தை மகளே வருக...
தை மகளே வருக...

எழுதியவர் : வைசா (11-Jan-13, 5:13 pm)
சேர்த்தது : samu
பார்வை : 141

மேலே