பூக்களின் புதல்வி
நீ
சேலை கட்டும் அழகில்
சிவந்தன ரோஜாக்கள் ...
உன் புன்னகையை
பிரதிபலித்தது மல்லிகை ...
உன் தங்க முகம் பார்த்து
தவித்தது தாமரை ...
உன் செந்நிற அழகை
சேர்த்து வைத்தது செம்பருத்தி ..
உன் மஞ்சள் உடலில்
மயங்கின சமாந்தி
உன்னை பார்த்ததும் வேர்த்தது
செடிகளுக்கு ..!!

