ஏன் இத்தனை ஏற்பாடு..?

சுற்றம் கதறி அழுது
புலம்பிக் கொண்டிருந்தது..
கனவுகள் சுமக்கும்
சுமை தாங்கி சரிந்திருந்தது...

நெஞ்சம் கரைந்திருக்க
வாய்ப்பில்லை - ஆனால்
முந்தானைகள் நனைந்திருந்தன..

அழாவிட்டால் வேஷம்
கலைந்து விடும் என்று
ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...

பிணம் என்று
பெயர் மாற்றப்பட்டிருந்தது..

வரவு செலவு அன்று தான்
பார்க்கப்படுகின்றது..
வக்கீல்கள் வந்திருந்தார்கள்..
சொத்து வழக்கு நடக்கிறது...

செலவு இல்லாத உணவு பரிமாற்றம்...
உண்டபின் தூக்கம்..
உறவுகளின் குறட்டை ஒலிகளையும்
மீறி இரவு அழுகிறது...

அழுகைக்கு பின்னால்
சிரிப்பொலிக‌ளும் கேக்கிறது...

பார்த்து பொறுக்காமல்
பேழைக்குள் இருந்து எழுந்து விட
நினைக்குறது உடம்பு...
முடியவில்லை....

கால்கள்
கட்டப்பட்டிருந்தன..
கைகள்
இணைக்கப்படிருந்தன..

மூச்சு முட்டுகிறது
கதைக்க நினைக்கிறது...
முடியவில்லை....

புத்திசாலிகள் எழுந்தாலும்
எழுந்து விடுவான் என்று தான்
எத்தனை ஏற்பாடா...?

எழுதியவர் : -தமிழ்நிலா- (16-Feb-13, 9:50 am)
சேர்த்தது : thamilnila
பார்வை : 102

மேலே