..."பாலசந்திரனுக்கு ஓர் அஞ்சலி"....

"நெஞ்சு பொறுக்கவில்லையே...... இந்த
பிஞ்சு முகத்தினைப் பார்க்கையிலே....
கொலு கொலுவென்ற அழகுப்பையனை
கொன்றுத் தீர்த்ததே கொடூரச்சிங்களம்...
கண்களில் சோகமும், எங்கே போகும் நம்முலகம்
என்ற சிந்தனையில் உறைந்து கிடந்த பாலகனை,
உலகத்தை விட்டே விரட்டிய பாதகச்சிங்களம்...
இனிவரும் ஈழத்து பரம்பரை,,,,
இவன் புகழ் பாடி புத்துணர்வு பெறட்டும்...
தமிழினத்தை அழிக்க நடந்த
இனப்படுகொலைப் போரின் உச்சக்கட்டம் இதுவல்லவோ.!
மாவீரனாக நெஞ்சிலே தோட்டாக்களை
வாங்கி வீரமரணம் அடைந்திட்ட
இப்பாலகனை பாரில் வாழும் எவரும்
மறந்திட இயலாது..., மறந்தால்
அவன் மனிதனே கிடையாது...
பால்வடியும் முகத்துடன், பசி தீர்த்துக் கொண்டிருந்த
பச்சைப் பாலகனை படுகொலை செய்து விட்டார்களே..
கண்களில் கண்ணீர் தான் வரணும்.... ஆனால்
குருதியைக் கொப்புளிக்கச் செய்து விட்டது
இந்த கொடூரச் செயல்...
"கண்ணா,, பாலச்சந்திரா.... எந்த இரத்த பந்தமும்
நமக்கிடையில் இல்லை... என்றாலும்,
உன் மறைவுக்கு என் கருவறையே
கலங்குதையா..... ...... ......
மீண்டும் பிறந்து வா....
செழிப்பான.... சிறப்பான.... அமைதியான...
வாழ்க்கை உன்னை வரவேற்கும்....
அரவணைக்கும்...........!