வெட்கிச் சாகிறேன்

சிங்களன் ஆடிய கோரத் தாண்டவம்
சீக்கிரம் மனதில் விலகிப் போகுமோ?
பாலகன் நெஞ்சிலே பாய்ந்ததே குண்டுகள்
பாவம் அகலுமோ பன்னிப் பிறவிகள் !!

விடுமுறை அளித்து வீடுசேர கட்டளை,
காரணம் கூடவா தெரியவில்லை உனக்கு
கண்களை திறந்து பாரடா உலகை,
வில்லென பறந்து விதியினை மாற்றவா !!

வெற்றிட வயிறு வெந்நீராய் எரிந்தும்
விலகிட வில்லை வேட்கை ஒன்று !!
தோழனே தோழியே, வெட்கிச் சாகிறேன்
உங்களைப் போலே ஏனில்லை நான் !!

எழுதியவர் : (19-Mar-13, 1:11 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 95

மேலே