தென்றல்

தென்றல் காற்றே ...!!!
நீ என் கூந்தல் கோதும் போது
தாய் தலை கோதும் சுகம்....
மனதில் சலனம், தனிமை தேடினேன்
அனுமதி இல்லாமல்
என் தனிமை கலைத்து
என் மீது மோதி விளையாடினாய்
மனதின் பாரம் குறைந்தது....
உன் மீது சிறிய கோபம்
ஒரு குற்றச்சாற்று
நங்கையின் வளைவு நெளிவுகளை
அப்பட்டமாய் காட்டிவிடுகிறாய் என்று .....