போர் வேண்டாம்

போர் வேண்டாம் !

எல்லையில் துப்பாக்கிச்
சண்டை - ஐயகோ !
தொல்லையாம் போர்வந்து
கொல்லுமே ஆளை !

அப்பாவி மக்களைக்
கொன்று - அந்தத் !
தப்பான கூட்டமும்
போடுமே ஆட்டம் !

மதச்சண்டை இனச்சண்டை
நிலச்சண்டை - இன்னும்
எதெற்கென்று தெரியாது
இருநாட்டுப் பகைமை !

குற்றமுமே அறியாத
மக்களை - எதிரியின்
ஏவு கணைகளும்
தாக்கியே கொல்லுமே !

என்னதான் பாவங்கள்
செய்தாரோ - இந்த
எளியோரின் உயிருக்கு
மதிப்பேதும் இல்லையோ !

போதுமே போரெல்லாம்
வேண்டாம் - இனியேனும்
புத்தரின் காந்தியின்
பொற்காலம் போதுமே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (21-Jun-25, 7:59 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 15

மேலே