புலிக்கொடி

பாரடா மனிதா பாரடா
பாரினில்
புலிக்கொடி பறக்குமடா
பாசமான நம் வீர மைந்தர்கள்
புலியாகி
பலியாகி உருவாகும் நல்தேசமடா!

பாரடா மனிதா பாரடா
பகைவன் படையினிலே
பாரதம் இருந்தும் புலிப் -
படை வெல்லுமடா! நம்
பெயர் சொல்லுமடா!

பாரடா மனிதா பாரடா
பசிக்கும் குடலும், உயிர்
பறிக்கும் குப்பியும்
மரிக்கும் பாரடா
பாரும் கண்டு வியக்கும் பாரடா!

பாரடா மனிதா பாரடா
பகைக்கும் மதமும்
சிதைக்கும் சாதியையும்
சிதைந்தே போகும் பாரடா
சிந்தையும், செயலும் சிறகாய் முளைக்கும்
நேரம் மலரும் பாரடா!

பாரடா மனிதா பாரடா
போரினில் மாண்ட வீரமகனைப் -
பாரடா
அவனே நம் வீரத்தின் உறமடா!

பாரடா மனிதா பாரடா
தமிழீழம்
பிறக்குது பாரடா
பாடடா போற்றி பாடடா
தமிழ் வீரமைந்தர்களைப் -
போற்றி பாடடா!

எழுதியவர் : சக்தி (15-Apr-13, 3:13 pm)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 148

மேலே