மனிதம் மலரட்டும்

நான்
கருவில் இருக்கும்போதே
தனக்கு பிடிக்காவிட்டாலும்
எனக்காக உன்பாளே என் தாய்
அப்பொழுதுதான் பிறந்ததோ
முதன்முதலில்
நான் உணர்ந்த மனிதம் !

ஒரு நாள்
ஜாதிக் கலவரத்தில்
எரிக்கப்பட்ட பேருந்தில்
ஜாதி வெறியின் சூடு
தாங்கமல் அலறியது
தவழும் பிராய மனிதம் !

மற்றொரு நாள்
மதக் கலவரத்தில்
ஊருக்குள் ஓடிய
குருதி வெள்ளத்தில்
தானும் ஒரு
சிறு புள்ளியாய்
வேறு வழியின்றி
அடித்து செல்லப்பட்டது
நடை பயிலும் மனிதம்!

நீண்ட தூர
ரயில் பயணத்தின் போது
நிற்க முடியா முதுமை ஒன்று
கைத்தடிக்கும்
இடமில்லாமல் அல்லாட
வனப்பான இளமை இரண்டு
ஒன்றை ஒன்று
கவனிக்கும் முயற்சியில்
கால் மேல் காலிட்டு
அமர்ந்திருக்க அவர்களின்
உயர்ந்த காதலின்
ஆழத்தில் கனிந்து தான்
போயிற்று
வளர்ந்த வாலிப மனிதம்!

இப்போது
அப்பாவி பாலகன்
பாலச்சந்திரன் சுடப்பட்டபோது
அந்த துப்பாக்கியின்
தோட்டாவை தடுக்க
முயன்று முயற்சியில்
தோற்றது
வலுவான இளைய மனிதம்!

ஆம் !
மனிதன் வளர வளர
மனிதம் மட்கித்தான் போயிற்று
இருப்பினும்
அது இறந்து விடவில்லை!

என்றாவது ஒருநாள்
மனிதம்
சத்தியமாய் மலரும்
சாட்சியாய் நான் ................

எழுதியவர் : Srichella (22-Apr-13, 4:03 pm)
சேர்த்தது : Sri Chella
பார்வை : 607

மேலே