வீரத்தமிழினம்

என்று விடியும்
என்று தணியும்
இந்த
அடிமை மோகம் !

சுதந்திரம் பெற்றும்
தரித்திரம் பெற்ற
இந்தத்
தமிழனின் யோகம் !

சொந்த நாட்டில்
சொத்தை இழந்து
சொத்தையாய் வாழும்
இவன்
அடிமை யாகம் !

சேரன்,சோழன்,பாண்டியன்
வீரம் வளர்த்த எந்நாடு !
முல்லைக்குத் தேரீந்த வேந்தன்
கொடை வளர்த்த எந்நாடு !
இன்று
ஏன் சென்றது
என் இனம்
மண்ணோடு ?

ராட்சதர் வாழும்
அண்டை நாட்டில்
பேசத் தொண்டை
இழந்தனரோ?

அடிமைப் பட்டு
உதிரம் செரிய
இந்த பூமியில்
சாகப் பிறந்தனரோ ?

தமிழினப் பெண்கள்
மானம் இழக்க
வானம் பார்திருந்ததோ ?

தமிழின மழலை
மண்ணில் புதைய
நிலமும் விரும்பியதோ ?

தமிழினம் என்றால்
தனக்குக் கீழே
என எண்ணும்
மானிடரே !

தக்கதோர் உண்மை
உரைப்பேன்; உங்கள்
செவியைத் தீட்டுங்கள் !

காலைச் சூரியன்
உதிக்கும் முன்
மூடுபனியும் வானை
ஆள்ந்திடுமே !

வெப்பக் கதிரவன்
முளைத்தால்
எப்பனியும் ஓடி
ஒளிந்திடுமே !

யானை ஓநாய்
எலிகள் நரிகள்
சேர்ந்தால்
புலிகள் பயந்திடுமா ?

கையை ஓங்கி
செவிட்டில் அறைந்து
இரண்டாய்
கிழித்திடுமே !

எந்தன் இனம்
சென்றிருக்கலாம்
மண்ணோடு !
வீரம் சாகவில்லை
வாழ்கிறது
நெஞ்சோடு !

தன்னைத் தாக்க
யார் வரினும்
பூனைகள் பயந்திடுமே !
புலிகள் பயந்திடுமா ?

பூனை கூட
ஓரிடம் சென்று
திருப்பித் தாக்கிடுமே !
புலிகளுக்கென்ன ! நின்ற இடம் திரும்பி
உயிரைப் பறித்திடுமே !

வேலை வந்தால்
வாளை ஏந்தும்
வீரம் அறிந்திடுவோம் !
நேரம் வந்தால்- உன்
நேரம் தீர்க்கும்
தீரம் அறிந்திடுவோம் !

உம்மை அழிக்க
எங்களுக்கு தோட்டாக்கள்
வேண்டாம் !
விழித்துப் பார்த்தே
அழித்து விடுவோம் !

எந்தன் மக்கள்
சிந்தும்
ஒருதுளிக் கண்ணீர் !
விலையாய் எடுப்போம்
உந்தன் உடலில்
பல துளி செந்நீர் !

எழுதியவர் : செந்தமிழன் பாலா (8-May-13, 6:47 pm)
பார்வை : 173

மேலே