எனக்கு மட்டுமே
கண்களால்
பார்த்துக்கொண்டபொழுது
காதல் தெரிந்தது
காதல் வளர்ந்து
கைகளால் தீண்டிக்கொண்டபிறகு
காமம் தெரிந்தது
காமம் வளர்ந்து
உடல்களால் சேர்ந்துகொண்டபிறகு
மோகம் தெரிந்தது
மோகம் வளர்ந்து
தீர்ந்துபோனதும்
எனக்கு மட்டுமே கானல் தெரிந்தது.