இயற்கை

இயற்கை

இயற்கையே!
இறைவன் படைப்பின் அதிசயமே!

இயந்திர வாழ்க்கையில்
இவ்வுலகில்
இன்னலுறும் மானிடரின்
இதயங்களுக்கு
இன்பம் தருகின்றாய்!


காடுகள் ,மலைகள்
கடலின் அலைகள்,.
பாடிடும் பறவைகள்,
பலவகை மிருகங்கள்,
வீழுகின்ற அருவிகள்,
ஓடிடும் நதிகள் என
உன் அவதாரங்களைக்
காண்போர் நெஞ்சங்களின்
கவலைகளுக்கு
மருந்துகளாக்குகின்றாய்!


அதிகாலை வானில்
ஆதவன் உதயமும்
அந்தி வானில்
சந்திரன் உதயமும்
நீல வான வீதியில்
நீந்தி செல்லும்
வெண் மேகங்களும்
காணுகின்ற நெஞ்சங்களில்
தோணுகின்ற ஆனந்தத்திற்கு அளவுண்டோ?

அமைதியாய் இருக்கும் போது
எங்களை
ஆனந்தப்
படுத்துகின்றாய்.

பொங்கி வெடிக்கும்
எரிமலையாய்,
புயலாய், மழையாய்
பெரும் வெள்ளமாய்
சுனாமியாய்
நீ அவதாரங்கள் எடுக்கும் போது
எங்கள் இனத்தையே
அழிக்கின்றாயே!
நாங்கள் செய்த
தவறுகளுக்கு
நீ
வழங்கும் தண்டனைகளோ?

இருந்தாலும்
இயற்கையே!
உன்னை நேசிக்கின்றோம்
இயன்ற அளவு
உன்னைப்
பாதுகாக்கும் பணிகளில்
எங்களை
மாற்றுகின்றோம்!

எழுதியவர் : கோ. சிவகுமார் (28-May-24, 8:44 pm)
சேர்த்தது : K SIVAKUMAR
Tanglish : iyarkai
பார்வை : 67

மேலே