குறுங் கவிதைகள்ஒன்று

முகம் பார்க்கும் கண்ணாடி
முகம் காட்ட மறுக்கிறது
ஒவ்வொரு பிம்பத்திலும் ...!

ஒவ்வொரு வருடமும்
தோற்றுத்தான் போகின்றேன்
நிலவோடு அழகுப் போட்டியில்...!

தூங்க மறுக்கின்றது
பொம்மைகள்
குழந்தைத் தாலாட்டிலும்...!

தோற்றாலும்
முயற்சிப் படிக்கட்டுகளில்
ஏறுவதை விடுவதில்லை...!

உழைப்பாளிகளையும்
உயர்த்திவிட்டது
'மே ' தினத்தில் ஆடு...!

வானத்தில் கெட்டி மேளம் நாதாஸ்வரமாம்
மின்னல் கீற்றாய் ராகம் பல்லவி
மேகங்கள் கண்ணீர் விடுகிறதாம்
நிலவைக் காணோம் என்று ...!

மழை பெய்யும் போது மட்டும்
வானத்திற்கு வெட்கமாம் முகத்தில்
ஏழு வண்ணம் கொண்ட வானவில்....!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Jun-13, 4:03 pm)
பார்வை : 165

மேலே