கொல்லி

சுவரில் ஊறும் பல்லி
எதிர் வரும் ஜந்துவின் மரணம்
வீட்டில் ஒரு பூச்சி கொல்லி

வெட்டியது மரக் கோடாலி
வீழ்ந்தது காட்டு மரங்கள்
மத்தளம் முழங்கும்
மேகங்களின் சப்த்தம் இல்லை
மனிதன் இயற்க்கை கொல்லி.

ஊரெல்லாம் தொழிலகம்
வீதியெல்லாம் ஊர்திகளின் ஊர்வலம்
ஆகாயமெல்லாம் நச்சுப் புகை
ஓசோன் பந்தலில் ஓட்டை
அடைப்பார் யார் கொல்லியே ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-13, 5:58 pm)
பார்வை : 118

மேலே