சாதியைக் கொல்லுங்கள் . இளவரசன்களை கொல்லாதீர்!

உடையவள் பிரிய
உயிர் பிரிந்தானோ ?
உடையவள் உறவினன்
உயிர்ப் பறித்தானோ ?

உண்மை எதுவாகினும்
உயிர் விலை மதிபற்றதாகும்

உன்னதக் காதல்
உயர்வு தான்
உயிரோ அதற்கும்
உயர்வு தான்

உள்ளங்களின் உராய்வில்
உணர்வாய் காதல்
உயிர் விட

உற்றவன் குணமும் நலனும்
உடையவள் காக்கும்
உறுதி உண்டோ -என
உறுதி செய்தல் பிழையில்லை

உயர் சாதி
கீழ் சாதி என கூறும்
மனுதர்ம மலத்தின் வகுத்தலில்
மனங்களை கொல்லாதீர்

ஒற்றை இனத்தின் பிள்ளைகளே
பகைமை வளர்க்கும்
சாதியைக் கொல்லுங்கள்

மனுசாத்திரக் கழிவின்
மக்கள் அல்ல நாம்
மானுடம் போற்றும்
தமிழ்த்தேசிய பிள்ளைகள் யாம் ...................

எழுதியவர் : தமிழ்முகிலன் (11-Jul-13, 11:31 am)
பார்வை : 736

மேலே