வாலி என் நெஞ்சில் வலி
காலத்தால் அழியாத
காவியங்கள் பலபடைத்த - ஓர்
எழுத்தாணி மை இன்று
எழுதாது போனதுவோ !
தமிழன்னை மகுடமதில்
தரமான மாணிக்கக்கல்
தாங்கிடவே பலரிருந்தும்
தரைமீது வீழ்ந்ததுவோ !
வாலியின் எதிர்நின்றால்
வலிமையோ வலுவிழக்கும்
முன்னின்று மோதாது - காலன்
முதுகில் குத்தினனோ !
ஆவியை பறித்தாலும்
ஆண்டவன் அவனறிவான்
வாலியின் வான்புகழோ
வையம்வாழ வாழுமென்று.........
-ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..