எனது குறிப்பேட்டின் பக்கங்கள்...[15]

பேருருவம்
*****************
நீண்ட
எனது கனவுப் பாதையில்
விண்மீன்களாய்
சிதறிக் கிடக்கின்றன
உன் நினைவுகள்
கண் சிமிட்டியபடி

அள்ளிக்கொள்ள
நெருங்குகையில்
திகைப்புகளை நிறைத்து
அவை
மேலும் பேருருக் கொண்டு
வளர்கின்றன

ஒரு அமீபாவாய்
கண்ணுக்குத் தெரிந்த நீ
ஆகாயமாய்
விரிந்து செல்கிறாய்
என் வருகைக்கு முன்னால்

உன்னால் துளிர்க்கும்
சிந்தனைகளில்
இன்னும் அறியப்படாததாய்
உனது உணர்வின்
நுணுக்கங்கள்

எழுதிய
கவிதைகளுக்குள்ளும்
அடங்காது
பிரமிப்புகளைக் காட்டத்
தோன்றும்
தோற்றங்கள்

காதல் வெளிப்பாட்டின்
ஆழம் என்னதான் என்று
தோண்டத் தோண்ட
புதுப்புது புரிதல்கள்

இரவில் கனவு
பகலில் கனவு...
அதையும் தாண்டி
ஆட்படுகிறது
இரவும் பகலும்
கனவிற்குள்

உன் காதல்
வெளிப்பாட்டின் முழுமையை
எட்டுவதற்கு
நான் இன்னும்
பல யுகங்களை
கடந்தாக வேண்டுமோ ???
[37]
***********************

[ பக்கம்… 16..... தொடரும் ]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (24-Aug-13, 4:36 pm)
பார்வை : 87

மேலே