=== பத்திரமாய் உனை பார்த்துக்கொள் ===

பள்ளியில் படிக்கும் வயதினிலே
காதல் பூத்திடும் மனதினிலே
சரியெது தவறேது தெரியாது
படிப்பினில் கவனம் நுழையாது

தொட்டுப் பேச நினைக்கும் மனம்
கட்டில் ஆசையை தூண்டும் தினம்
காதல் வந்தால் கூடும் கனம்
கண்ணீர் சிந்தி பெருகும் ரணம்

உன் அழகினை மெல்ல ரசித்திடுவான்
தலை முதல் கால் வரை ருசித்திடுவான்
உன் இதழ்களில் பழரசம் குடித்திடுவான்
உனை யாரென ஒருநாள் கேட்டிடுவான்

பட்டினி கிடந்த வயிற்றிற்கு
பாலெது பழமெது தெரியாது
சட்டென மென்று தின்றுவிடும்
பட்டென பறந்து சென்றுவிடும்

காதல் என்பதோர் அழகிய இலக்கணம்
ஆணும் பெண்ணும் சமமாய் இருக்கணும்
அன்பினில் இருவரும் மெழுகாய் உருகணும்
காதலின் ஒளி நிலவை வீழ்த்தனும்

கற்பு என்பது புனிதமடி-அதை
கட்டிக் காப்பது கடினமடி
பத்தினியாய் நீ உருவெடுக்க
பத்திரமாய் உனை பார்த்துக்கொள்

எழுதியவர் : ராஜ்கமல் (4-Sep-13, 8:19 pm)
பார்வை : 102

மேலே