வேணாமே.....என்றுமே

........வேணாமே என்றுமே

வெறுமென விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில்,
வரிவரியாய் தோன்றிய வடிவத்துக்குள் உன் முகம் வெளிப்பட,
விரக்தியுடன் மூடினேன் விழிகளை .........!

விரைந்து வந்த நீ விரல் சொடுக்கிட்டு
விஞ்சிய கொஞ்ச நஞ்ச நெஞ்ச நிம்மதியையும்,
விட்டு வைக்காமல் கவர்ந்து விட்டாயே...!

விலகிப் போகும்போதெல்லாம் விடாப்பிடியாய்,
உன்பார்வைக்குள் என்னை சிறைப்பிடித்த நீ,,,
விரும்பி நான் வரும்வேளையில் விதியின் பிடிக்குள்,
உன்னைச் சிக்க வைத்து விலகி விட்டாயே......

என்னை நான் மறந்தேனோ இல்லையோ..., ஆனால்
உன்னை பிரிந்திட்ட வேளை முதல் இன்று வரை
ஊனுறக்கமின்றி,,, உயிரிருந்தும் இல்லாத உணர்வாய்...
தேய்பிறையாய் தேய்ந்து கொண்டே வாடுகின்றேன்....

ஆறுதல் சொல்லிட ஆயிரம் உறவுகள் வந்தாலும்,,
ஆற்றிட இயலாத ஆழ்மனதுக்கு ஆண்டவனின்,
அரவணைப்பு மட்டுமே மாற்றிட இயலும்...,,,.!

அவனன்றி இவளிருக்கும் அலங்கோலத்தை இனி
எவளும்.. எவனும் ... இவ்வுலகினில் உணரவேண்டாம்....
இனி எந்தப் பிறவியிலும் வேண்டவே வேண்டாம்....

..............!!!!!!................!!!!!.........!!!!!!........

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (10-Sep-13, 8:22 am)
பார்வை : 110

மேலே