நீ என்ன‌ செய்தாய்?............

புதிதாய் பிறந்துவிட்டேன் மீண்டும்

நான்..... உன் புன்னகையில் பூத்தேன்...

உன் குரலில் எனை மறந்தேன்.....



நீ விழுதுகள் அதிகம் உள்ள‌ ஆலம்.....

உன் நிழலில் இளைப்பாற அனேகம் பேர்....

இளைப்பாறவே நானும் வந்தேன்.....



உன் நிழல் எனக்கு மட்டுமே என்று

வாதம் செய்யும் சிறுபிள்ளை ஆனேன்...

ஆயினும் கோபம் கொள்ளவில்லை நீ....



மாறாய் புன்னகை செய்தாய்....உனக்கா

தெரியாது? நிலா பார்த்து சோறு உண்ணும்

குழந்தையும் நானும் ஒன்றுதான் என்று....



நிலா என்றுமே வானம் விட்டு வருவதில்லை அதுபோல்

தூரத்தில் உனை ரசிக்கும் என் மனம்... என்றுமே

உனை காயப்படுத்தாதென்று நீ அறிந்திருக்கிறாய்....



அனைத்தும் அறிந்தவன் நீ அழகாய் சிரிக்கிறாய்...

உன் இமைகளின் படபடப்பில்..... என்

இதயம் சொக்கி நிற்கிறது.......



குடித்து போதையேற்றுபவர்கள் சிலர்.....முகர்ந்து

போதை ஏற்றுபவர்கள் சிலர்... நான் நினைத்தே

போதை ஏற்றிக் கொள்கிறேன்....



கலவரம் கொள்ளாதே உன் கைவிரல்

நிழல்கூட‌ நான் தொடேன்..... உன்

மூச்சுக்காற்றையும் நான் சிறை செய்யேன்...



குயிலின் பாடலும் செவியில் எட்டா எனக்கு

காக்கையின் சத்தமும் கவிதையாகிப்

போனதே என்ன‌ செய்தாய்??????................



இரும்பின் கனமாய் கனத்த‌ என் இதயம்

இறகினும் லேசாய் மாறிப் போனதே...

நீ என்ன‌ செய்தாய்?............

எழுதியவர் : (22-Sep-13, 2:58 pm)
சேர்த்தது : Seba S Justin
பார்வை : 78

மேலே