தோழர்களே எச்சரிக்கிறேன்-கே.எஸ்.கலை

அன்னதானம் போடுகையில்
ஆத்திகனாகவும்
அண்டா கழுவவேண்டி வருகையில்
நாத்திகனாகவும்
இருப்பாரோடு இருந்தால் சிரமம் !
=======
அருமையாய் கண் தெரிபவனோடு
அச்சமின்றி நடக்கலாம்
அறவே கண்தெரியாதவனோடு
அனுசரித்து நடக்கலாம்
அரைகுறையாய் கண் தெரிபவனோடு
அய்யோ அய்யோ முடியாது !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Sep-13, 9:52 pm)
பார்வை : 256

மேலே