கனவில் வந்து போறவளே...!

ரொம்பக் குளிருதடி...
கொஞ்சம் பாரேன்டி!
தேகம் நடுங்குதடி...
பக்கம் வாயேன்டி!

வெள்ளை நிறத் தேவதையே...
வண்ண முலாம் பூசுறியே!
கிட்ட வந்து முட்டுறியே...
தட்டி விட்டுப் போகிறியே!

தொட்டுப் பார்க்க முன்னால...
கட்டிப் போடுறாய் கண்ணால!
ஓரங்கட்டுறாய் தன்னால...
ஒண்ணும் முடியல என்னால!

கண்ணைச் சிமிட்டாதே...
கடிச்சுக் குதறுதடி!
என்னை மிரட்டாதே...
எண்ணம் சேர்ந்து மிரளுதடி!

என்னைத் தூண்டி இழுக்கிறாய்...
எல்லை தாண்ட அழைக்கிறாய்!
இன்பத் தொல்லை தருகிறாய்...
தீண்டும் முன்பே மறைகிறாய்!

வண்ணம் தந்த வானவில்லே...
எங்கேயுன்னைக் காணவில்லை!
கனவில் வந்து போறவளே! -உன்
நினைவில் நொந்து போகிறேன்டி!

எழுதியவர் : ஒருவன் கவிதை (4-Oct-13, 8:08 pm)
பார்வை : 132

மேலே