என் மனைவிக்கு பிறந்தநாள்
என்னவளுக்கு பிறந்தநாள் ,
வாழ்த்துக்களை பரிமாறுகின்றன .
எந்தன்மனம் – ஆசையால்
வருகையை பதிவு செய்ததால்,
சொர்க்கமடைகின்றன காகிதங்கள்,
உன்பெயரைசுமந்த -பிறப்புசான்றிதழ்
தடுமாறிய என் பாதங்களுக்கு,
தரணியில் தடம் தந்தவள்.
பார்வையால்
அழகு ஆச்சரிமுற்றது!
அழகியே நீ பிறந்தாயென,
பூலோகத்தில்,,,
உன் இருசக்கரவாகனமும்,
கோபித்துகொண்டதடி என்னை,
தாரமாகும் ஆசையில் தள்ளிவைத்து ,
தவிக்கவிட்டதால் -தனிமையில்
தமிழின்மீதும் வெறுப்பானேன்,
உனக்காக எழுத நினைக்க,
தடுமாறுகின்றன- வார்த்தைகள்,
உடுத்திக்கொள்வாயென
கொதிநீரில் நீந்தபழகுகின்றன,
பட்டுப்பூச்சிகள்!
முதல்முறை நீ அழுகையில்,
சந்தோசங்கள் துள்ளிக்குதித்தன,
தேவதை பிறந்தலென்று !
நாணலும் நாணுகின்றாள்,
தென்றல் நடைப்பழக,
நாணமகள் நாணுகின்றாள்,
கொஞ்சும் மழலையாய்-நீ,
“அம்மாவென்று”அழைக்கையில்.
அம்மாவாசையில் பயணித்தது- நிலவு
பத்துதிங்கள் மாத்திரம்
வழிவிட்டு விலகிக்கொண்டன,
வழிமறித்தாலும் - வலிகள்,
வானத்தேவதையின் வருகையில்
பசுமரத்தாணியின் அர்த்தமுணர்ந்தேன்
உன்னை கண்டதருணத்தை
சுமக்கின்றது –மனது
காலதேவனும் கலைத்து போவான்
கணித்துச் சொல்ல ஆயுளை
என்னுடனிருக்கையில் –நீ
சந்தோசத்திற்காக பிராத்தனைசெய்தவளை,
பிராதிக்கின்றன சந்தோசங்கள்,
சந்தோசத்திற்காகவென்று - பிறந்தாயடி
மெழுகில் ஒளிர்கின்றாள் !
உருகுகின்றன ஆசைகள் - உன்னை
அணைத்துக் கொள்ளவேண்டுமென,
உதடுகளை குவித்து ஊதுகையில் -நீ
பிறந்தநாள் கேகில் ஏற்றிய தீபத்தை,,,,,
தாய்மையை தாரமாக தந்த தெய்வத்திற்கு,
நன்றிகள் சொல்ல வேண்டும் ஆயில்லுள்ளவரை ,
அவளுக்காக துடிக்கும் இதயத்திலிருந்து ,
என் அன்பு மனைவி
அன்பு பரிசாக இந்த கிறுக்கல்களை
சமர்பிக்கிறேன் –குழந்தை நீ
குறும்பும் நீ ,என்கோபமும் -நீ
துடிப்பும் -நீ , என்தவிப்பும் -நீ
எல்லாமும் -நீதானடி.,,,,,,
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்